இரட்சகரைப் பற்றி யோவான் சாட்சி கூறுதல்

Fellowship

நாம் முந்தைய சந்திப்பிற்குப் பின் உங்களுக்கு நடந்தவற்றில் எவற்றிற்காக நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள்?
இந்த வாரம் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது எது, மேலும் நிலைமை சீராவதற்கு உங்களுக்கு என்ன தேவை?
உங்கள் சமூகத்தில் உள்ள மக்களின் தேவைகள் என்ன, மேலும் நாம் பகிர்ந்துகொண்ட தேவைகளைச் சந்திக்க ஒருவருக்கொருவர் எப்படி உதவ முடியும்?
நாம் கடந்த முறை சந்தித்தபோது பார்த்த சம்பவம் என்ன? கடவுளையும் மக்களையும் பற்றி நாம் என்ன கற்றுக்கொண்டோம்?
நமது கடந்த கூட்டத்தில் நீங்கள் கற்றுக்கொண்டதை கடைப்பிடிக்க முடிவு செய்தீர்கள். நீங்கள் என்ன செய்தீர்கள், அது எப்படி இருந்தது?
கடந்த கதையிலிருந்து நீங்கள் யாருடன் எதையாவது பகிர்ந்து கொண்டீர்கள்? அவர்கள் எப்படி பதிலளித்தார்கள்?
நாம் கடைசியாகச் சந்தித்தபோது பல தேவைகளைக் கண்டறிந்து, அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் திட்டமிட்டோம். அது எப்படி நடந்தது?
இப்போது, தேவனிடமிருந்து இன்றைய கதையை வாசிப்போம்...

மாற்கு 1: 1-8

¹ இறைவனுடைய மகன் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம். ² இது ஏசாயா என்ற இறைவாக்கினரின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது: “நான் என்னுடைய தூதனை உமக்கு முன்பாக அனுப்புவேன்; அவன் உமது வழியை ஆயத்தப்படுத்துவான்” ³ “ ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்காகப் பாதைகளை நேராக்குங்கள்’ என்று ஒருவனுடைய குரல் பாலைவனத்திலே சத்தமிட்டது.” அவ்வாறே யோவான் ஸ்நானகன் பாலைவனப் பகுதியில் வந்து, திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் மக்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்கு, அவர்கள் மனந்திரும்பிப் பெறவேண்டிய திருமுழுக்கைக் குறித்துப் பிரசங்கித்தான். யூதேயா மாகாணத்தின் எல்லா நாட்டுப்புறங்களிலும் எருசலேம் நகரத்திலுமிருந்து எல்லாரும் அவனிடம் சென்றார்கள். அங்கே அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் ஆற்றிலே அவனால் திருமுழுக்குப் பெற்றார்கள். யோவானின் உடைகள் ஒட்டக முடியினால் செய்யப்பட்டிருந்தன. அவன் இடுப்பைச் சுற்றி தோல் பட்டியையும் கட்டியிருந்தான். அவனது உணவு வெட்டுக்கிளியும், காட்டுத்தேனுமாய் இருந்தது. அவன் அறிவித்த செய்தி என்னவென்றால், “என்னைப் பார்க்கிலும் அதிக வல்லமையுள்ளவர் எனக்குப்பின் வருகிறார். நானோ அவருடைய பாதரட்சைகளின் வாரையும் குனிந்து அவிழ்ப்பதற்குத் தகுதியற்றவன். நான் உங்களுக்குத் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன்; ஆனால் அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரால் திருமுழுக்கு கொடுப்பார்.”

யோவான் 1: 29-34

²⁹ மறுநாளிலே இயேசு தன்னிடம் வருவதை யோவான் கண்டு, “இதோ பாருங்கள், இறைவனின் ஆட்டுக்குட்டி! இவரே உலகத்தின் பாவத்தை நீக்குகிறவர். ³⁰ ‘எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் மேன்மையானவராய் இருக்கிறார். அவர் எனக்கு முன்னமே இருந்தார்’ என்று நான் இவரைக் குறித்தே சொன்னேன். ³¹ நானும் அவரை அறியாதிருந்தேன். அவரை இஸ்ரயேலருக்கு வெளிப்படுத்தவே, நான் வந்து தண்ணீரில் திருமுழுக்கு கொடுத்தேன்” என்றான். ³² பின்பு யோவான் இந்த சாட்சியை சொன்னான்: “பரலோகத்திலிருந்து ஆவியானவர் ஒரு புறாவைப்போல் தம்மேல் இறங்கி, இயேசுவின்மேல் அமர்வதைக் கண்டேன். ³³ தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கும்படி என்னை அனுப்பினவர் எனக்குச் சொல்லியிருக்காவிட்டால், நானும் அவரை அறிந்திருக்கமாட்டேன். என்னை அனுப்பினவரோ, ‘பரிசுத்த ஆவியானவர் இறங்கி யார்மீது தங்குவதை நீ காண்கிறாயோ, அவரே பரிசுத்த ஆவியானவரால் திருமுழுக்கு கொடுக்கிறவர்’ என்று சொல்லியிருந்தார். ³⁴ இதை நான் கண்டேன். இவரே இறைவனின் மகன் என்று சாட்சி கூறுகிறேன்” என்றான்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™, ஆடியோ பதிப்பு பதிப்புரிமை ℗ 2024 Biblica, Inc. மற்றும் Davar Partners International Biblica® Open Indian Tamil Contemporary Version™, Audio Edition Copyright ℗ 2024 Biblica, Inc. and Davar Partners International Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc.

Application

இப்போது, இந்தப் பகுதியை இதுவரை கேட்டிராத ஒரு நண்பரிடம் சொல்வது போல, யாராவது தங்களின் சொந்த வார்த்தைகளில் மீண்டும் சொல்லட்டும். அவர்கள் எதையாவது விட்டுவிட்டாலோ அல்லது தவறுதலாக எதையாவது சேர்த்தாலோ அவர்களுக்கு உதவுவோம். அப்படி நடந்தால், "வேதபகுதியில் அதை எங்கே காண்கிறீர்கள்?" என்று நாம் கேட்கலாம்.
கடவுளைப் பற்றியும், அவருடைய குணத்தைப் பற்றியும், அவர் என்ன செய்கிறார் என்பதைப் பற்றியும் இந்தப் பகுதி நமக்கு என்ன போதிக்கிறது?
இந்தச் சரிதையிலிருந்து, நம்மைப் போன்ற மக்களைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
இந்தக் சம்பவத்திலிருந்து வரும் கடவுளின் உண்மையை இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் எப்படிப் பயன்படுத்துவீர்கள்? நீங்கள் செய்யப்போகும் ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது விஷயம் என்ன?
நாம் மீண்டும் சந்திப்பதற்கு முன்பு, இந்தச் சம்பவத்திலிருந்து ஒரு உண்மையை யாருடன் பகிர்ந்துகொள்வீர்கள்? நம்மைப் போலவே இந்தச் செயலியில் கடவுளுடைய வார்த்தையைக் கண்டறிய விரும்பும் மற்றவர்களையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
நமது சந்திப்பு முடிவடையும் நிலையில், நாம் மீண்டும் எப்போது சந்திப்பது என்றும், நமது அடுத்த சந்திப்பை யார் நடத்துவார் என்றும் முடிவு செய்வோம்.
நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று சொன்னதைக் குறித்துக் கொள்ளவும். நாம் மீண்டும் சந்திப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்தச் சம்பவத்தை மீண்டும் படிக்குமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். இந்த சம்பவத்தின் எழுத்துப்பிரதி அல்லது ஆடியோ யாரிடமாவது இல்லையென்றால், வழிநடத்துபவர் அதைப் பகிர்ந்து கொள்வார். நாம் புறப்பட்டுச் செல்லும்போது, நமக்கு உதவுமாறு கர்த்தரிடம் கேட்போம்.

0:00

0:00