இயேசு யார்?

Fellowship

நாம் முந்தைய சந்திப்பிற்குப் பின் உங்களுக்கு நடந்தவற்றில் எவற்றிற்காக நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள்?
இந்த வாரம் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது எது, மேலும் நிலைமை சீராவதற்கு உங்களுக்கு என்ன தேவை?
உங்கள் சமூகத்தில் உள்ள மக்களின் தேவைகள் என்ன, மேலும் நாம் பகிர்ந்துகொண்ட தேவைகளைச் சந்திக்க ஒருவருக்கொருவர் எப்படி உதவ முடியும்?
நாம் கடந்த முறை சந்தித்தபோது பார்த்த சம்பவம் என்ன? கடவுளையும் மக்களையும் பற்றி நாம் என்ன கற்றுக்கொண்டோம்?
நமது கடந்த கூட்டத்தில் நீங்கள் கற்றுக்கொண்டதை கடைப்பிடிக்க முடிவு செய்தீர்கள். நீங்கள் என்ன செய்தீர்கள், அது எப்படி இருந்தது?
கடந்த கதையிலிருந்து நீங்கள் யாருடன் எதையாவது பகிர்ந்து கொண்டீர்கள்? அவர்கள் எப்படி பதிலளித்தார்கள்?
நாம் கடைசியாகச் சந்தித்தபோது பல தேவைகளைக் கண்டறிந்து, அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் திட்டமிட்டோம். அது எப்படி நடந்தது?
இப்போது, தேவனிடமிருந்து இன்றைய கதையை வாசிப்போம்...

யோவான் 1: 1-18

¹ ஆரம்பத்தில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை இறைவனுடன் இருந்தது, அந்த வார்த்தை இறைவனாயிருந்தது. ² அந்த வார்த்தையானவர் ஆரம்பத்திலேயே இறைவனோடு இருந்தார். ³ அந்த வார்த்தையானவர் மூலமாகவே எல்லாம் படைக்கப்பட்டன; படைக்கப்பட்டிருப்பவைகளில் எதுவுமே அவரில்லாமல் படைக்கப்படவில்லை. அவரில் ஜீவன் இருந்தது; அந்த ஜீவனே எல்லா மனிதருக்கும் வெளிச்சமாயிருந்தது. அந்த வெளிச்சம் இருளிலே பிரகாசிக்கிறது, ஆனால் இருள் அதை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை. இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தான்; அவனுடைய பெயர் யோவான். தன் மூலமாய் எல்லா மக்களும் விசுவாசிக்கும்படியாகவே அந்த வெளிச்சத்தைக் குறித்து சாட்சி கொடுக்கும் ஒரு சாட்சியாகவே அந்த யோவான் வந்தான். அவன் வெளிச்சமாய் இருக்கவில்லை; அவனோ அந்த வெளிச்சத்திற்கான ஒரு சாட்சியாக மாத்திரமே வந்தான். உலகத்திற்குள் வந்து ஒவ்வொரு மனிதனுக்கும் வெளிச்சத்தைக் கொடுத்த வெளிச்சமே அந்த உண்மையான வெளிச்சம். ¹⁰ அந்த வார்த்தையானவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் படைக்கப்பட்டிருந்தும், உலகமோ அவரை இன்னார் என்று அறிந்துகொள்ளவில்லை. ¹¹ அவர் தமக்குரிய இடத்திற்கே வந்தார். ஆனால் அவருடைய சொந்த மக்களோ, அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ¹² ஆனால் அவர் தம்மை ஏற்றுக்கொண்டு தம்முடைய பெயரில் விசுவாசம் வைத்த அனைவருக்கும், இறைவனுடைய பிள்ளைகளாவதற்கு உரிமையைக் கொடுத்தார். ¹³ இப்பிள்ளைகள் இரத்த உறவினாலோ, மனித தீர்மானத்தினாலோ, புருஷனுடைய விருப்பத்தினாலோ உண்டானவர்கள் அல்ல. மாறாக இவர்கள் இறைவனால் பிறப்பிக்கப்பட்டவர்கள். ¹⁴ வார்த்தையானவரே மனித உடல் எடுத்து நம்மிடையே வாழ்ந்தார். நாங்கள் அவருடைய மகிமையைக் கண்டோம். பிதாவின் ஒரே மகனுக்குரிய அந்த மகிமையைக் கண்டோம். அந்த வார்த்தையானவர் கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய் பிதாவிடமிருந்து வந்தவர். ¹⁵ யோவான் அவரைக்குறித்து சாட்சி கொடுத்து: “எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் மேன்மையானவராய் இருக்கிறார். ஏனெனில், ‘அவர் எனக்கு முன்னிருந்தவர் என்று இவரைக் குறித்தே நான் சொன்னேன்’ என அவன் சத்தமிட்டுச் சொன்னான்.” ¹⁶ அவருடைய நிறைவிலிருந்து, நாம் எல்லோரும் கிருபையின்மேல் கிருபையை பெற்றிருக்கிறோம். ¹⁷ ஏனெனில் சட்டம் மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்டது; கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வந்தது. ¹⁸ இறைவனை எவருமே ஒருபோதும் கண்டதில்லை. பிதாவாகிய இறைவனின் இருதயத்தின் அருகில் இருக்கின்ற அவருடைய ஒரே மகனும் தாமே இறைவனுமாயிருக்கிறவர் பிதாவை வெளிப்படுத்தினார்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™, ஆடியோ பதிப்பு பதிப்புரிமை ℗ 2024 Biblica, Inc. மற்றும் Davar Partners International Biblica® Open Indian Tamil Contemporary Version™, Audio Edition Copyright ℗ 2024 Biblica, Inc. and Davar Partners International Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc.

Application

இப்போது, இந்தப் பகுதியை இதுவரை கேட்டிராத ஒரு நண்பரிடம் சொல்வது போல, யாராவது தங்களின் சொந்த வார்த்தைகளில் மீண்டும் சொல்லட்டும். அவர்கள் எதையாவது விட்டுவிட்டாலோ அல்லது தவறுதலாக எதையாவது சேர்த்தாலோ அவர்களுக்கு உதவுவோம். அப்படி நடந்தால், "வேதபகுதியில் அதை எங்கே காண்கிறீர்கள்?" என்று நாம் கேட்கலாம்.
கடவுளைப் பற்றியும், அவருடைய குணத்தைப் பற்றியும், அவர் என்ன செய்கிறார் என்பதைப் பற்றியும் இந்தப் பகுதி நமக்கு என்ன போதிக்கிறது?
இந்தச் சரிதையிலிருந்து, நம்மைப் போன்ற மக்களைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
இந்தக் சம்பவத்திலிருந்து வரும் கடவுளின் உண்மையை இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் எப்படிப் பயன்படுத்துவீர்கள்? நீங்கள் செய்யப்போகும் ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது விஷயம் என்ன?
நாம் மீண்டும் சந்திப்பதற்கு முன்பு, இந்தச் சம்பவத்திலிருந்து ஒரு உண்மையை யாருடன் பகிர்ந்துகொள்வீர்கள்? நம்மைப் போலவே இந்தச் செயலியில் கடவுளுடைய வார்த்தையைக் கண்டறிய விரும்பும் மற்றவர்களையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
நமது சந்திப்பு முடிவடையும் நிலையில், நாம் மீண்டும் எப்போது சந்திப்பது என்றும், நமது அடுத்த சந்திப்பை யார் நடத்துவார் என்றும் முடிவு செய்வோம்.
நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று சொன்னதைக் குறித்துக் கொள்ளவும். நாம் மீண்டும் சந்திப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்தச் சம்பவத்தை மீண்டும் படிக்குமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். இந்த சம்பவத்தின் எழுத்துப்பிரதி அல்லது ஆடியோ யாரிடமாவது இல்லையென்றால், வழிநடத்துபவர் அதைப் பகிர்ந்து கொள்வார். நாம் புறப்பட்டுச் செல்லும்போது, நமக்கு உதவுமாறு கர்த்தரிடம் கேட்போம்.

0:00

0:00