சபை கடவுளுக்குரியது

Fellowship

நாம் முந்தைய சந்திப்பிற்குப் பின் உங்களுக்கு நடந்தவற்றில் எவற்றிற்காக நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள்?
இந்த வாரம் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது எது, மேலும் நிலைமை சீராவதற்கு உங்களுக்கு என்ன தேவை?
உங்கள் சமூகத்தில் உள்ள மக்களின் தேவைகள் என்ன, மேலும் நாம் பகிர்ந்துகொண்ட தேவைகளைச் சந்திக்க ஒருவருக்கொருவர் எப்படி உதவ முடியும்?
நாம் கடந்த முறை சந்தித்தபோது பார்த்த சம்பவம் என்ன? கடவுளையும் மக்களையும் பற்றி நாம் என்ன கற்றுக்கொண்டோம்?
நமது கடந்த கூட்டத்தில் நீங்கள் கற்றுக்கொண்டதை கடைப்பிடிக்க முடிவு செய்தீர்கள். நீங்கள் என்ன செய்தீர்கள், அது எப்படி இருந்தது?
கடந்த கதையிலிருந்து நீங்கள் யாருடன் எதையாவது பகிர்ந்து கொண்டீர்கள்? அவர்கள் எப்படி பதிலளித்தார்கள்?
நாம் கடைசியாகச் சந்தித்தபோது பல தேவைகளைக் கண்டறிந்து, அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் திட்டமிட்டோம். அது எப்படி நடந்தது?
இப்போது, தேவனிடமிருந்து இன்றைய கதையை வாசிப்போம்...

1 கொரிந்தியர் 3: 1-15

¹ பிரியமானவர்களே, நான் ஆவிக்குரியவர்களிடம் பேசுவதைப்போல், என்னால் உங்களுடன் பேச முடியவில்லை. உலகப்பிரகாரமானவர்களாக, கிறிஸ்துவில் குழந்தைகள் என்று எண்ணியே பேச வேண்டியதாயிற்று. ² நான் உங்களுக்குப் பாலையே கொடுத்தேன். பலமான உணவை உங்களுக்குக் கொடுக்கவில்லை. ஏனெனில், நீங்கள் அதை உட்கொள்ளக்கூடிய நிலையில் இருக்கவில்லை. இன்னும் நீங்கள் அதை உட்கொள்ள முடியாதவர்களாகவே இருக்கிறீர்கள். ³ ஏனெனில், இன்னமும் உலகத்திற்குரியவர்களாகவே இருக்கிறீர்கள். இன்னும் உங்களிடையே பொறாமையும் சண்டை சச்சரவுகளும் இருக்கிறபடியால், நீங்கள் உலகத்திற்குரியவர்கள்தானே. நீங்கள் சாதாரண மனிதர்களைப்போல் அல்லவா நடந்துகொள்கிறீர்கள்? “நான் பவுலைப் பின்பற்றுகிறவன்” என்று ஒருவன் சொல்லும்போது, மற்றவன், “நான் அப்பொல்லோவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான். அப்படியென்றால், நீங்கள் சாதாரண மனித இயல்பின்படிதானே நடந்துகொள்கிறீர்கள். அப்பொல்லோ யார்? பவுல் யார்? உங்களை விசுவாசத்திற்கு வழிநடத்திய கர்த்தரின் ஊழியர்கள்தானே. அப்படியே ஒவ்வொருவரும் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த பணியையே அவர்கள் செய்கிறார்கள். நான் விதையை நட்டேன், அப்பொல்லோ தண்ணீர் ஊற்றினான், ஆனால் இறைவனே அதை வளரச்செய்தார். எனவே நடுகிறவனும், தண்ணீர் ஊற்றுகிறவனும் முக்கியமானவர்களல்ல. அவற்றை வளரச்செய்கிற இறைவன் மட்டுமே முக்கியமானவர். நடுகிறவனுக்கும் தண்ணீர் ஊற்றுகிறவனுக்கும் ஒரே நோக்கமே உண்டு. அவர்கள் ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ற கூலியைப் பெறுவார்கள். நாங்கள் இறைவனின் உடன் வேலையாட்கள்; நீங்களோ இறைவனின் வயல்நிலம், இறைவனின் கட்டிடம். ¹⁰ இறைவன் எனக்குத் தந்த கிருபையின்படி, ஒரு கட்டிட நிபுணனைப்போல நான் ஓர் அஸ்திபாம் போட்டேன். வேறு ஒருவன் அதன்மேல் கட்டுகிறான். ஆனால் ஒவ்வொருவனும், தான் எவ்வாறு கட்டுகிறான் என்பதைக்குறித்துக் கவனமாயிருக்க வேண்டும். ¹¹ ஏற்கெனவே போடப்பட்ட அஸ்திபாரத்தைத் தவிர, வேறு அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் முடியாது. அந்த அஸ்திபாரம் இயேசுகிறிஸ்துவே. ¹² யாராவது இந்த அஸ்திபாரத்தின்மேல் கட்டும்போது தங்கம், வெள்ளி, மாணிக்கக் கற்கள், மரம், புல், அல்லது வைக்கோல் ஆகியவற்றைக்கொண்டு கட்டலாம். ¹³ ஆனால் கிறிஸ்துவின் நாளில், அவனவனுடைய வேலைப்பாடு உண்மையாகவே எப்படியானது என்று வெளிப்படும். அது நெருப்பினால் வெளிப்படுத்தப்படும். மேலும், ஒவ்வொரு மனிதனுடைய வேலையின் தரத்தையும் நெருப்பு பரிசோதிக்கும். ¹⁴ அவன் கட்டியது நிலைத்திருந்தால், அவன் தனக்குரிய வெகுமதியைப் பெறுவான். ¹⁵ அவன் கட்டியது எரிந்துபோகுமாயின், அவன் நஷ்டமடைவான்; ஆனால் அவனோ இரட்சிக்கப்படுவான். ஆயினும் அவனுடைய நிலை அக்கினி ஜுவாலையில் அகப்பட்டுத் தப்பிய ஒருவனைப்போல் இருக்கும்.

1 கொரிந்தியர் 3: 21-23

²¹ எனவே, இனிமேல் மனிதர்களைக்குறித்துப் பெருமைகொள்ள வேண்டாம்! எல்லாக் காரியங்களும் உங்களுடையவைதான். ²² பவுலானாலும், அப்பொல்லோவானாலும், கேபாவானாலும், அவர்கள் எல்லோரும் உங்களுடையவர்களே. இந்த உலகமானாலும், வாழ்வானாலும், மரணமானாலும், நிகழ்காலமானாலும், எதிர்காலமானாலும், அவையெல்லாமே உங்களுடையதே. ²³ நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள், கிறிஸ்து இறைவனுக்குரியவர்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™, ஆடியோ பதிப்பு பதிப்புரிமை ℗ 2024 Biblica, Inc. மற்றும் Davar Partners International Biblica® Open Indian Tamil Contemporary Version™, Audio Edition Copyright ℗ 2024 Biblica, Inc. and Davar Partners International Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc.

Application

இப்போது, இந்தப் பகுதியை இதுவரை கேட்டிராத ஒரு நண்பரிடம் சொல்வது போல, யாராவது தங்களின் சொந்த வார்த்தைகளில் மீண்டும் சொல்லட்டும். அவர்கள் எதையாவது விட்டுவிட்டாலோ அல்லது தவறுதலாக எதையாவது சேர்த்தாலோ அவர்களுக்கு உதவுவோம். அப்படி நடந்தால், "வேதபகுதியில் அதை எங்கே காண்கிறீர்கள்?" என்று நாம் கேட்கலாம்.
கடவுளைப் பற்றியும், அவருடைய குணத்தைப் பற்றியும், அவர் என்ன செய்கிறார் என்பதைப் பற்றியும் இந்தப் பகுதி நமக்கு என்ன போதிக்கிறது?
இந்தச் சரிதையிலிருந்து, நம்மைப் போன்ற மக்களைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
திருச்சபையாக இருப்பது பற்றி இந்தச் சம்பவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
இந்தக் சம்பவத்திலிருந்து வரும் கடவுளின் உண்மையை இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் எப்படிப் பயன்படுத்துவீர்கள்? நீங்கள் செய்யப்போகும் ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது விஷயம் என்ன?
நாம் மீண்டும் சந்திப்பதற்கு முன்பு, இந்தச் சம்பவத்திலிருந்து ஒரு உண்மையை யாருடன் பகிர்ந்துகொள்வீர்கள்? நம்மைப் போலவே இந்தச் செயலியில் கடவுளுடைய வார்த்தையைக் கண்டறிய விரும்பும் மற்றவர்களையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
நமது சந்திப்பு முடிவடையும் நிலையில், நாம் மீண்டும் எப்போது சந்திப்பது என்றும், நமது அடுத்த சந்திப்பை யார் நடத்துவார் என்றும் முடிவு செய்வோம்.
நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று சொன்னதைக் குறித்துக் கொள்ளவும். நாம் மீண்டும் சந்திப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்தச் சம்பவத்தை மீண்டும் படிக்குமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். இந்த சம்பவத்தின் எழுத்துப்பிரதி அல்லது ஆடியோ யாரிடமாவது இல்லையென்றால், வழிநடத்துபவர் அதைப் பகிர்ந்து கொள்வார். நாம் புறப்பட்டுச் செல்லும்போது, நமக்கு உதவுமாறு கர்த்தரிடம் கேட்போம்.

0:00

0:00